
மன்னாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தில் அர்ச்சுனாவை இன்றையதினம் (07.08.2024) முற்படுத்திய போதே அவருக்கு சரீரப்பிணை வழங்க நீதவான் உத்தரவு வழங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (2) இரவு மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து சனிக்கிழமை (3) காலை வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வைத்தியர் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவரை இன்றைய தினம் (7) புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் வைத்தியர் அர்ச்சுனாவை இன்றையதினம் (7) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவரை சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, வைத்தியரை பார்வையிடுவதற்றகாக மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் நீதிமன்ற பகுதியில் சூழ்ந்து கொண்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வந்த நிலையில், வைத்திய செயற்பாட்டு வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அர்ச்சுனா மீது முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
