வவுனியாவில் அரச காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது
3 months ago

அரச காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தக் காணி விற்பனை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்தே சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
