வவுனியாவில் அரச காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது
4 months ago

அரச காணி ஒன்றுக்குப் போலி ஆவணங்கள் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்தக் காணி விற்பனை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்தே சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
