
இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த காஸா நகரில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சில சடலங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் பிரதானி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய செய்தி தொடர்பாளர் கூறுகையில், குறித்த பாடசாலை கட்டிடம் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக அண்டை நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
