
தொல்பொருள் மதிப்பு மிக்க தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய தயாரான நபர் ஒருவரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (01) கைது செய்துள்ளனர்.
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுவிஹார பிரதேசத்தில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு அளவுகளில் 24 இதழ்களைக் கொண்ட தொல்லியல் மதிப்புடையதாகக் கூறப்படும் இந்த தங்கத் தாமரை மலரின் எடை 706 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மலரை 5,000,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் 33 வயதான மாத்தளை கவுடுபெல்லல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
