2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது இலங்கையின் தேசிய ஒலிம்பிக்குழு, நிதி முறைகேட்டில் ஈடுபட்டது என்று எழுந்துள்ள குற்றசாட்டுகளை ஆராயுமாறு குற்றப்புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கின் போது பயண மற்றும் தங்குமிடச் செலவுகளுக்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் தலா 10 ஆயிரம் அமெரிக்க டொலரை ஏற்கனவே சர்வதேச ஒலிம்பிக் குழு வழங்கியிருந்தது.
எனினும் 10ஆயிரம் அமெரிக்க டொலருக்குச் சமமான இலங்கை ரூபாவை அவர்கள் வசூலித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் ஹேமசிறி பெர்னாண்டோ தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராகவும், மெக்ஸ்வெல் டி சில்வா பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
