

ரஸ்யாவின் கேர்ஸ்க் பகுதிக்கு ஊருடுவியுள்ள உக்ரைன் படையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஸ்ய படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
கேர்க்ஸ் பிராந்தியத்தில் 13 கிலோமீற்றர் உள்ளே உள்ள கிராமமொன்றை நோக்கி உக்ரைனிய படையினர் முன்னேறிச் செல்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேர்க்ஸ் எல்லையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொரெனெவோ என்ற பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதாக ரஸ்யாவின் புளொக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஸ்யாவிற்குள் ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுட்ஜாவின் மேற்கு பகுதி உக்ரேனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேர்ஸ்க்கில் அவசர நிலைமையை ரஸ்யா அறிவித்துள்ளது.
அந்த பகுதியிலிருந்து 3000க்கும் அதிகமான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
செவ்வாய்கிழமை திடீர் தாக்குதலை மேற்கொண்டு சுட்ஜாவினை கைப்பற்றிய உக்ரைன் படையினர் வடமேற்கு வடக்கு திசை நோக்கி முன்னேறியுள்ளனர்.
சுட்ஜாவின் சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்ட ரஸ்ய படையினரை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
