யாழ். கொடிகாமத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும் பிரதேசத்தை புகையிரத திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டனர்.
5 months ago

யாழ். கொடிகாமம் நாவலடி பகுதியில் வெள்ளம் வடிந்தோடாது தேங்கி நிற்கும் பிரதேசத்தை புகையிரத திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டனர்.
வெள்ளம் தேங்கி நிற்பதால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
அத்தோடு, வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்தே வெள்ளம் வெளியேற முடியாது தேங்கி நிற்கும் இடங்களை பார்வையிட்ட அதிகாரிகள், மக்களுடன் கலந்துரையாடியதுடன் இனிவரும் காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்காது வடிந்தோட ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
