புதிய ஜனாதிபதி தொடர்பில் தங்களது தரப்புக்கு சிறந்த புரிந்துணர்வு இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

புதிய ஜனாதிபதி தொடர்பில் தங்களது தரப்புக்கு சிறந்த புரிந்துணர்வு இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பளை - மாவை கலட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தற்போதைய ஜனாதிபதி தொடர்பில் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது.
எங்களுடைய மக்களின் பிரச்சினை தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளோம்.
எனினும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே இந்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆரம்ப கால கட்டங்களில் ஜே.வி.பியான ஆயுதப் போட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பி தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
நாங்களும் ஆரம்பக் காலங்களில் ஆயுதம் ஏந்தி போராடி, பின்னர் ஜனநாயக வழியைத் தேர்வு செய்தோம்.
அவர்களும் நாங்களும் இடதுசாரி பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் இரு தரப்புக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது-என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
