
10ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றிருந்த நிலையில் நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தை நடத்துவதற்கான திகதி தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது ஆளும் தரப்பினால் 26ஆம், 27ஆம் திகதிகள் முன்மொழியப்பட்டபோது சிறீதரன் எம்.பி. குறித்த இரண்டு திகதிகளில் மாவீரர்கள் வாரத்தின் இறுதி நாளாக இருப்பதால் பங்கெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து 28ஆம் திகதி மாலை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மாவீரர் வாரத்தினால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற சிறீதரன் எம்.பி. கூறிய போதும் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் கட்சித் தலைவர்கள் வெளியிடவில்லை.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
