தற்கொலை முயற்சிகளால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆயிரம் பேர் வரையானோர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று யாழ். போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவின் மருத்துவ நிபுணர் முத்துலிங்கம் நவநீதன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தலைமையில் மருத்துவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட மருத்துவர் நவநீதன், தற்கொலைகள், தற்கொலை முயற்சி கள் அதிகரித்து வருகின்றன. யாழ். போதனா மருத்துவமனையில் 750 முதல் ஆயிரம் பேர் வரையிலானவர்கள் தற்கொலை முயற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், 75 - 100 பேர் வரையிலானவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் கூறினார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
