மன்னார் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில்

மன்னார் நீதிமன்றத்தின் முன் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -
மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு முரண்பாடு எழுந்தது.
முதல் சம்பவத்தில் 2022 ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
இறுதியாக வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் முதலாவதாக இடம்பெற்ற இருவரின் மரணம் தொடர்பில் சந்தேகநபர்களாவர்.
எவ்வாறாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
இந்தச் சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையைப் பெற்றுள்ளோம். - எனத் தெரிவித்தார்.
இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
