இலங்கையில் அரசியல்வாதிகள், இராணுவம், அரச அதிகாரிகள் என 7 பேரின் சொத்துகளை முடக்க நடவடிக்கை.-- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுப்பு

அரசியல்வாதிகள், இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் என 7 பேருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
இதனால், இந்த 7 நபர்களும் தமது சொத்துகள், வங்கி கணக்குகள் மற்றும் காப்புறுதியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படவுள்ளது.
அடையாளம் காணப்பட்ட 7 பேரும் தமது வருமானம் மூலம் சேர்க்க முடியாதளவு சொத்துகளை எவ்வாறு சேர்த்தனர் என்பது குறித்த புலனாய்வு சாத்துதல்களையும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு செய்துள்ளது.
அத்துடன், இந்த சொத்துகள் தங்கள் குடும்பத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலம் கிடைத்தன என்று இவர்கள் தெரிவித்திருப்பது பொய் என்பதும் விசாரணைகளில் வெளிவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க இவர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
