இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரன் சாவித்ர சில்வா மீது கொலை வெறித் தாக்குதல்
4 months ago

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரன் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 7. 30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலை, பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரத்மலானே சுத்தா என்று அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா மேலும் சிலருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த சாவித்ர சில்வா, மொறட்டுவை லுனாவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
