யாழ்.கோப்பாய் அரச வங்கியில் நிலையான வைப்பிலிட்ட பணத்தை, மோசடி செய்த முகாமையாளர் ஒருவருக்கு விளக்கமறியல்
3 months ago

யாழ்.கோப்பாய் அரச வங்கியில் நிலையான வைப்பிலிட்ட பணத்தை, தவறாகக் கையாண்டு மோசடி செய்த முகாமையாளர் ஒருவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பிரதேசத்தில் இயங்கி வந்த அரச வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக, பணத்தின் உரிமையாளரால் (நிலையான வைப்பிலிட்டவரால்) யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அந்த முகாமையாளர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
