மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது மகிந்த தேசப்பிரிய வலியுறுத்து.

பாராளுமன்றத் தேர்தலை விடவும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
இராஜகிரியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் -
ஜனாதிபதியின் உரைக்கமைய பாராளுமன்றம் ஒரிரு தினங்களுக்குள் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் 52 தொடக்கம் 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவிக்கும் வர்த்தமானியில் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தையும் தேர்தலுக்கான தினத்தையும் குறிப்பிட வேண்டியதில்லை.
அதாவது இவ்வாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் டிசெம்பர் மாதத்தின் முதல் வாரத்துக்குள் நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தற்போதுள்ள பாராளுமன்றத்துக்கும் மக்கள் ஆணை கிடையாது.
எனவே இந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும்.
அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் நடத்தி மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது மாகாண சபைகளும் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. அவை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்.
ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக நாம் முன்னிற்போம்.
13ஆவது திருத்தமா அல்லது 13 பிளஸா என்பது இரண்டாம் பட்சமாகும். ஆனால், மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
