
உக்ரைனுக்கு உதவ நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 இலட்சம் இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் பரா தக்லல்லாஹ் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோ பெல்ஜியத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்தக் கூட்டமைப்பில் தற்போது 32 நாடுகள் உள்ளன. இதன் கடைசி உறுப்பு நாடாக சுவீடன் கடந்த மார்ச் மாதம் இணைந்தது. இந்த கூட்டமைப்பில் இணைய உக்ரைனும் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.
ஆனால், சில உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் உக்ரைனால் இன்னும் இணைய முடியவில்லை. இதற்கிடையே உக்ரைனின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அதன் மீது போர் தொடுத்தது.
எனவே, உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பல்வேறு உதவிகளை வழங்குகின்றன. அவற்றின் மூலம் உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 இலட்சம் இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர். எனவே, ரஷ்யாவை தனிமைப்படுத்தவும். உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளை மேலும் அதிகரிக்கவும் முயற்சிகள் நடைபெறுவதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் பரா தக்லல்லாஹ் கூறினார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
