இலங்கை அரசாங்கம் 15 அமைப்புகள் மற்றும் 210 தனிநபர்களின் சொத்துகளை முடக்குவதாக அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தேசிய தவ் ஹீத் ஜாமத், நாடு கடந்த தமிழீழ அரசு, கனேடிய தேசிய தமிழ் கவுன்ஸில், புலம் பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் இளைஞர் பேரவைகள் உள்ளிட்ட 15அமைப்புகளின் சொத்துகளும், இவற்றுடன் தொடர்புடையவர்களினதும் இவற்றுக்கு நிதி ஆதாரங்களை வழங்கும் 210 தனிநபர்களினதும் சொத்துகளே இவ்வாறு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை, பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்களைப் பலப்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
