
இந்தியாவில் தற்போது பதவியில் இருக்கும் எம். பி. மற்றும் எம். எல். ஏக்களாக இருக்கும் 151 பேர் தங்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங் கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாக ஏ. டி. ஆர். ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இதில், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.
இந்த அறிக்கைக்காக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏ.டி.ஆர்) கடந்த 2019 முதல் 2024 வரையிலான தேர்தல்களின்போது, தற்போது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த 4,809 பிரமாணப் பத்திரங்களில் 4,693 பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. அதில், 16 எம்.பிகள், 135 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சந்தித்து வருவது தெரியவந்தது.
இந்தப் பட்டியலில் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது பதவியில் இருக்கும் 25 எம்.பிக்கள் மற்றும் எம். எல். ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிர தேசத்தில் 21 பேர், ஒடிசாவில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அறிக்கையின்படி, தற்போது பதவியில் உள்ள எம். பி.மற்றும் எம். எல். ஏக்களில் 16 பேர், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் தங்கள் மீது இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றங்களுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம். இந்த 16 பேரில் இருவர் எம்.பிகள். 14 பேர் எம். எல். ஏக்கள்.
கட்சிகளைப் பொறுத்தவரை, பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ளும் எம். பி., எம். எல். ஏக்களில் 54 உறுப்பினர்ளைக் கொண்டு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 23 உறுப்பினர்களுடன் இரண்டாவது இடத்திலும், தெலுங்கு தேசம் கட்சி 17 உறுப்பினர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் தலா 5 உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
