கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆடியம்பலம பகுதியில் விசா இன்றி தங்கியிருந்த 6 இந்தியர்கள் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,000 சிகரெட்டுகள் அடங்கிய 50 சிகரெட்டு கார்ட்டுன்களுடன் இந்திய பிரஜை ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
