
உயிர் அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், மதிப்பீட்டின் பின்னர் பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் உயிர் அச்சுறுத்தல் உள்ள வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் 15 எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற் பார்வையிடுவதற்கு விசேட குழு வொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குழுவின் தலைவராக பதவி வகிக்கிறார்.
குழு எடுக்கும் தீர்மானங்களுக்கமைய, வேட்பாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். இதன் மூலம், அச்சுறுத்தலுக்கு உள்ளான வேட்பாளர்களின் வீடுகளுக்கும், அவர்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது அவர்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும்.
மேலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களுக்கும் விசேட பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
