

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள் ஜேர்மன் நன்கொடையாளர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் இந்த நன்கொடைப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வு வவுனியா பொது வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து அமைப்பின் ஊடாக சர்வதேச இந்து கலாசார ஆலோசகரான கலாநிதி இரத்னசாமி இராமேஸ்வரன் என்பவரால் ஜேர்மன் நாட்டிலிருந்து பெறப்பட்ட இந்த நன்கொடைகள் இலங்கையின் பல பாகங்களில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாக வடக்கு மாகாணத்திலுள்ள வைத்திய சாலைகளின் அவசர சிகிச்சை பிரிவிற்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
