ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு இராஜாங்க அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
7 months ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அந்தப் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷனடி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோரே உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளனர். அரசமைப்பில் 47(3)அ பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தற்துணிவு அதிகாரத்தின் கீழ் இந்தப் பதவிநீக்கங்கள் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
