
போலி உறுதி மோசடியில் ஈடுபட்டமைக்காக, யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நில அளவையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியர் மருதங்கேணியில் உள்ள தமது காணிக்கு ஆனைக்கோட்டையில் வசிக்கும் ஒருவருக்கு அற்றோனித் தத்துவம் வழங்கியிருந்தனர். அந்த அற்றோனித்தத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்திய அந்த நபர், தொடர்புடைய காணிக்கு அருகிலிருந்த காணிகளையும் அடாத்தாக ஆக்கிரமித்து பருத்தித்துறையைச் சேர்ந்த நில அளவையாளர் ஒருவர் மூலம் வரைபடம் கீறியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரசித்த நொத்தாரிஸ் ஒருவர் மூலம் பிறிதொருவருக்கு அந்தக் 'காணியின் அதிகாரம் கைமாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போலியாக உறுதி நிறைவேற்றப்பட்ட காணியின் உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேடகுற்ற விசாரணைப் பிரிவினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலி ஸார், அற்றோனித் தத்துவத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர், காணியை அளவீடு செய்த நிலஅளவையாளர் மற்றும் காணியின் அதிகாரம் இறுதியாக மாற்றப்பட்டவர் ஆகிய மூவரையும் கைதுசெய்தனர். அவர்கள் நீதி மன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட போது, மூவரையும் கடுமையாக எச்ச ரித்த நீதிவான் அவர்களைப் பிணை யில் செல்ல அனுமதித்ததுடன் வழக் கைத் தவணையிட்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
