போலியான கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைய முயன்ற 02 ஆப்கானிஸ்தானியர் திருப்பப்பட்டனர்

போலியான கஜகஸ்தான் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைய முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
சந்தேக நபர்கள் நேற்று முன்தினம்(20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு பயணிகளும் 21-23 வயதுடைய ஆப்கானியர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் நேற்று அதிகாலை 3.29 மணிக்கு குவைத்திலிருந்து ஜசீரா எயார்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை அடைந்ததும், இருவரும் தங்கள் குடியேற்ற முறைகளை முடிக்க குடிவரவு பிரிவுக்கு சென்று, தங்கள் கஜகஸ்தான் கடவுச்சீட்டையும் மற்றும் ஏனைய ஆவணங்களை ஒப்படைத்தனர்.
அவர்கள் சமர்ப்பித்த கடவுச் சீட்டுகள் தொடர்பான சந்தேகங்கள் காரணமாக, இருவரையும் அவர்களது ஆவணங்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளில் இந்த கஜகஸ்தான் கடவுச் சீட்டுகளில் சில பக்கங்கள் நுட்பமாக மாற்றப்பட்டு, போலியாக தயாரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் பொதிகள் சோதனை செய்தபோது, அவர்களின் இரண்டு உண்மையான ஆப்கானிய கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதற்கமைய அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் இலங்கைக்குள் பயணிக்கவோ அல்லது வேறு நாட்டிற்கு தப்பிச் செல்லவோ எந்த திட்டமும் இல்லை என்பது தெரிய வந்தது.
அவர்கள் இலங்கையில் குடியேற வந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரையும் குவைத் விமானத்தில் நாடு கடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
