இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது ஜனாதிபதி வெளிப்படுத்தவும். லூசி மக்கேர்னன் வேண்டுகை

பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களிற்கு என்ன நடந்தது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் புதிய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிற்கான பிரதி இயக்குநர் லூசி மக்கேர்னன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும், கடந்த கால அட்டூழியங்களிற்கு நீதியை தேடும் முயற்சிகளிற்கு இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் மிகவும் அவசியமானது.
பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்களது குடும்பத்தவர்களிற்கும் நீதி மறுக்கப்படுவது தொடர்ந்தால் இலங்கை தொடர்பில் சர்வதேச நடவடிக்கை அவசியம்.
பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களிற்கு என்ன நடந்தது என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் புதிய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
நீதியைத் தேடும் பாதிக்கப்பட்டவர்களை மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாப்பு படையினர் துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும்.
முன்னைய அரசாங்கங்களினால் தடுக்கப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
