சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அகிலன் முத்துக்குமாரசாமி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான மயூரன், சுதர்சன், மாவை சேனாதிராஜா கலையமுதன், குணாளன் ஆகியோரே இக் கலந்துரையாடலில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக விரிவான பேச்சில் ஈடுபட்டதாகவும் விசேடமாக சாவகச்சேரியை தனியான பிரதேச செயலக பிரிவாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருந்ததாகவும் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக சுமந்திரன் அணியினர் அறிவித்த நிலையில் அக்கட்சியின் குழுவினர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
