யாழ்.ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு முன்வைத்த யோசனை பரிசீலிக்கப்படும்.--ஜனாதிபதி தெரிவிப்பு


யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றுமாறு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்ததாவது:
நான் ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எனக்கு அரச செலவில் வீடு தேவையில்லை. பாதுகாப்பும் வேண்டாம்.
கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் மாத்திரம் பராமரிக்கப்படும். நுவரெலியா, யாழ்ப்பாணம், உடவலலை உட்பட ஏனைய பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களுக்குரிய வீடுகள் தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றன.
அவ்வாறு சொத்து பெறுமதியை மதிப்பிட்ட பிறகு, பொருளாதாரத்துக்கு பயனளிக்கும் வகையில் அவை பயன்படுத்தப்படும்.
அதற்குரிய வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து யோசனைகளை முன்வைப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது -என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
