
கொங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற மோதலால் முன்செஸ்க் நகரிலுள்ள சிறைச்சாலையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறி வைத்து எம் - 23 என்ற கிளர்ச்சிக் குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
எனவே, அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.
இதற்கிடையே கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இதில், ஐ. நாவின் அமைதிப் படையினர் உட்பட 13 பேர் பலியாகினர்.
இதன் தொடர்ச்சியாக முன் செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
அப்போது சிறைக் காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த கைதிகள் அனைவரும் தப்பியோட்டம் பிடித்தனர்.
இதில் சுமார் 6 ஆயிரம் கைதிகள் அங்கிருந்து தப்பியோடியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
