மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த தரப்பினர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் விசாரிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்தினம் முன்னிலையாகி இருந்தார்.
இதன்படி, அவர் நேற்று முன்தினம் முற்பகல் 9.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஏலவே, இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர் அங்கு முன்னிலையாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக யோசித ராஜபக்ஷவையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரை எதிர்வரும் 3ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
