ஈ.பி.டி.பி யின் முன்னாள் எம்.பி கு.திலீபன் மற்றும் பிரத்தியேகச் செயலாளர் நிதி மோசடியில் கைது செய்து பிணையில் விடுவிப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேகச் செயலாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட நிதி மோசடிக் குற்றப் பிரிவுப் பொலிஸார் கைது செய்தனர்.
மேற்படி இருவரும் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
15 இலட்சம் ரூபா காசோலை நிதி மோசடி தொடர்பில் முன்னாள் எம்.பி. திலீபனின் பிரத்தியேகச் செயலாளரை நேற்று வியாழக்கிழமை மாலை வவுனியா மாவட்ட நிதி மோசடிக் குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து முன்னாள் எம்.பி. கு.திலீபன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
மேற்படி இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தியிருந்தனர்.
இதன்போது அவர்கள் 3 இலட்சம் ரூபா பணத்தை முறைப்பாட்டாளருக்குச் செலுத்திய நிலையில், இருவரையும் சரீரப் பிணையில் நீதிமன்றம் விடுவித்தது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
