ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ரணில் முன்னெடுக்கிறார் எம்.பி கஜேந்திரன் தெரிவிப்பு
ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஜனாதிபதி ரணில் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்காக சலுகைக ளுக்கு விலை போகக் கூடியவர்களை ஒற்றையாட்சிக்குள் வைத்துக்கொண்டு பல்வேறு செயற் பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்த உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை இந்திய மேற்குத் தரப்புக்களிடம் தெரிவித்து வருகிறார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை எந்த வகையிலும் நம் பிக்கை தரவில்லை, நாட்டை பொரு ளாதார வளர்ச்சியில் முன்னோக்கி கொண்டு செல்வதாக கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றி மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இந்த நாட்டில் 75 வருடமாக காணப்படும் இனப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். மேலும் ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடு களை ரணில் முன்னெடுத்து வருகிறார் என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
