கனடாவில் கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்கள் தொடர்பில் மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

3 months ago



கனடாவில் கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்கள் தொடர்பில் மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் பிக்கரிங் நகரைச் சேர்ந்த 34 வயதான சுவேஸ்தன் கணேசமூர்த்தி, பிரிம்டன் நகரைச் சேர்ந்த 29 வயதான அருண்ஷியா அருளானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவினருடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் பல சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்களின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விபரமறிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் புலனாய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்