பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் பிரிட்டன் பொலிஸார் விசாரணை

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டார் என்று வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தனது நண்பர் ஊடாக பிரிட்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த வீட்டுக்கு சென்றபொலிஸார் அந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்யவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இராஜதந்திர விடுபாட்டு உரிமை காரணமாக பொலிஸார் அந்த வீட்டுக்குள் செல்லவில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, முறைப்பாடு செய்த நபர் அவசர கடவுச்சீட்டின் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
