யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
7 months ago

யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
சுண்டுக்குழியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாஸன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபருக்கு வாய்பேச முடியாது என்பதுடன் காதும் கேட்காது.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளை ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
