வெளிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவர் என பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு..

வெளிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் உரிய தினத்தில் கடமைக்கு சமுகம ளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென் றதாக கருதப்படுவார்கள் என பொதுநிர்வாக அமைச்சு தெரி வித்துள்ளது.
இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்கவேண்டுமாயின் முதலாவது விடுமுறை காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலத்தை நீடித் துக்கொள்ளும் அனுமதியை பெறுவதில் ஏற்படும் சிக்கல் ஏற் கனவே பெறப்பட்ட விடுமுறை காலப் பகுதிக்குள் தீர்க்கப்படாவிட்டால் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் வெளிநாட்டு விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மீறும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக அமைச்சு தெரி வித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
