கடந்த கால கொலைகள் தொடர்பான விசாரணைகளை மீள தொடங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

வசீம் தாஜூதீன் கொலை, லசந்த விக்ரம துங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக் னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான முடிக்கப்படாத விசாரணைகளை மீள தொடங்கியுள்ளதாகவும் அவற்றை எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சில விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் நடந்த அனைத்து குற்றங்கள் குறித்தும் விசாரணைகளைத் தொடங்கி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக உறுதியளித்தார்.
இந்த விசாரணைகள் அனைத்தும் அரசியல் நலன்களின் அடிப்படையில் நடத்தப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், குற்றவியல் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
