கிளிநொச்சி பளை - தம்பகாமம் பகுதியில் நள்ளிரவு வீடொன்றில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

2 months ago



கிளிநொச்சி, பளை - தம்பகாமம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடொன்றில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கிலும், சொத்தழிவை ஏற்படுத்துவதற்காகவும் குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.