இந்தோனேசிய ‘க்ரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' என்ற கடற்படை கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
5 months ago

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘க்ரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' என்ற கப்பல் நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இக்கப்பல் இந்தோனேசிய கடற்படையின் சிக்மா - கோர்வேட் ரகத்தைச் சேர்ந்ததாகும்.
நேற்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது.
120 பணியாட்களைக் கொண்ட இந்தக் கப்பல் 9071 மீற்றர் நீளமுடையதாகும்.
இதன் கட்டளை அதிகாரியாக கப்டன் அனுகேரா அன்னுறுல்லா செயற்படுகின்றார்.
இக்கப்பல் நாட்டிலிருக்கும் காலத்தில் நாட்டின் முக்கிய இடங்களுக்கு செல்லவுள்ளதோடு, நாளை திங்களன்று நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
