
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கடந்த திங்கள்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக் கான நீர் வசதிகள், மின்சாரம் வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், விமானப் படை அதிகாரிகள், ஏவியேஷன் நிறுவன உதவி முகாமையாளர், பலாலி விமான நிலைய செயல் பாட்டு முகாமையாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகால மைப்பின் உதவிப் பணிப்பாளர், தொழில்துறைத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் சந்தைப்படுத்தல் பிரிவு ஆகிய வற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
