வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவருக்கும் பாண்டிச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
7 months ago


வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவருக்கும் பாண்டிச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று 02.11.2024 இடம்பெற்றது.
தமிழ்நாடு பாண்டிச்சேரி அரசின் சுற்றுலாத்துறை ஒன்றிய அமைச்சருக்கும் வடமாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவர் சு.சுதர்சனுக்கும் இடையிலான சந்திப்பு சனிக்கிழமை பாண்டிச்சேரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவர் நட்பு ரீதியான சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் இலங்கை இந்திய சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாகவும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையை பார்வையிடுவதற்கான சுற்றுலா ஒழுங்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் சுற்றுலா தொடர்பான விளக்க கையேடு அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
