யாழ்., வடமராட்சி, வல்வெட்டித் துறை - ஆதிகோவிலடி கடற்கரையில் பாரிய மிதவை கரையொதுங்கியுள்ளது.

2 months ago



யாழ்., வடமராட்சி, வல்வெட்டித் துறை - ஆதிகோவிலடி கடற்கரையில் பாரிய மிதவை கரையொதுங்கியுள்ளது.

கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கரையொதுங்கிய மிதவையைப் பொதுமக்கள் எனப் பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

இதேபோன்ற மிதவைகள் அண்மையில் வடமராட்சி கிழக்கில் மருதங்கேணி, கட்டைக்காடு, சுண்டிக்குளம் போன்ற பகுதிகளில் கரையொதுங்கியிருந்தன.

அண்மைக் காலமாக வடமராட்சி கரையோரங்களில் மிதக்கும் கூடாரங்கள், மிதவைகள் போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்