கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்த தமிழகத்தைச் சேர்ந்த அனிதா இந்திரா, போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
4 months ago

கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா இந்திரா உள்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா, தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனிதா இந்திரா கூறும்போது,
பிரதமர் பதவிப் போட்டியிலிருந்து விலகியுள்ளேன். மேலும் நாடாளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப் போவதில்லை. தனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி.
என்னை நாடாளுமன்ற உறுப்பினராகிய ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன்.
கல்வித்துறைக்குத் திரும்புவதன் மூலம் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன் என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
