
யாழ்ப்பாணத்தில் வேலைக்குச் சென்ற இளைஞன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த தவராசா ரகுமாதவா (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை வேலைக்கு சென்ற நிலையில், வேலைத்தளத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து, சக தொழிலாளர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
