

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிசார் நடாத்திய யுக்திய போதை ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் கடந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ் ரமேஷ் தெரிவித்தார்.
இச்சுற்றிவளைப்பின்போது இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பெண்ணுடன் எட்டு பேர் காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர நாவற்குடா, நொச்சிமுனை, கல்லடி பிரதேசங்கலிருந்து சுமார் 40 லீற்றர் கசிப்புடன் எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
