ஜப்பான் மீண்டெழ காரணமாகிய அறிவு, வடக்கு திட்டங்களுக்கு வேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவிப்பு
பெரும் அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்துவர காரணமாகிய அறிவு, வடக்கின் மீள் எழுச்சித் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்களை ஆளுநருக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்த கலந்துரையா டல் இடம்பெற்றது.
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். பிரணவ நாதனும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.
பெரும் அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வர காரணமாகிய அறிவு, வடக்கின் மீள் எழுச்சித் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப அறிவு, திறன் அபிவிருத்தி, மனிதவள முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப் பட வேண்டும்.
விவசாயம், கல்வி, டிஜிற்றல் பொருளாதாரம். சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நிதி முகாமைத்துவம், ஊட்டச் சத்து திட்டங்கள், விசேட தேவையுடையோருக்கான கல்வி உள்ளிட்ட விடயங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இவ்வாறான திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமது அமைப்பு தயாராக உள்ளதென தெரிவித்த JICA அமைப்பின் பிரதிநிதிகள், அவற்றுக்கு ஆளுநரின் பூரணமான ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுவதாக கூறினர்.
திண்ம கழிவு முகாமைத்துவம், பிளாஸ்ரிக் அற்ற சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக JICA பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதற்காக ஜப்பான் நாட்டிலிருந்து துறைசார் அனுபவமிக்க தொண்டர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு வரவழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
