முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பிரதேசத்துக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் தேக்கமரக் குற்றிகளைக் கடத்திச் சென்ற ஹைஏஸ் வாகனமொன்று மோதியதில் உயர்தர மாணவன் படுகாயம் அடைந்துள்ளான்.
இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியால் மாணவன் மாலை நேர வகுப்பு முடித்து சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோதே வேகமாக வந்த ஹைஏஸ் வாகனம் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துத் தொடர்பான விசாரணையில் வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் தேக்கமரக்குற்றிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
சாரதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
படுகாயமடைந்த மாணவன் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச் சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப் பட்டுள்ளான்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
