காலி, மித்தெனிய கடேவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகன், மகள் என மூவர் உயிரிழந்தனர்



காலி, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகன் மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தந்தை, மகன் மற்றும் மகள் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 39 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த 6 வயதுடைய மகள் தங்காலை வைத்தியசாலையிலும், 9 வயது மகன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டனர்.
எனினும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு ரி -56 துப்பாக்கி பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
