19 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் தாய்லாந்து பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
37 வயதுடைய தாய்லாந்து பெண்ணே கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பின்னர் சந்தேகநபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 22 கிலோ நிறையுடைய குஷ் மற்றும் ஹாஷ் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
