19 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் தாய்லாந்து பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
37 வயதுடைய தாய்லாந்து பெண்ணே கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பின்னர் சந்தேகநபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 22 கிலோ நிறையுடைய குஷ் மற்றும் ஹாஷ் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
