யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் நேற்று அதிகாலை வீடு தீக்கிரை

2 months ago



யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் நேற்று அதிகாலை வீடொன்று பகுதியளவில் தீக்கிரையாகியுள்ளது.

அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்த வீட்டின் உரிமையாளரின் முயற்சியின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிபத்துக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.

அண்மைய பதிவுகள்