இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர்.
4 months ago

இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் பெரும் எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரித்தானியப் பிரதமர் இல்லம் வரை அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்தப் பேரணியின் பின்னர் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை மீள பெற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டிய கடப்பாடு பிரிட்டனுக்கு உள்ளதை வலியுறுத்தி பிரிட்டிஷ் பிரதமருக்கும் மன்னர் சார்லஸ் மற்றும் உயரதிகாரிகளுக்கும் கடிதம் ஒன்றை ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்வில் உலகளாவிய புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
