இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர்.

2 months ago



இலங்கையின் சுதந்திரதினமான நேற்று முன்தினம் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்களும் கரிநாளாக அனுஷ்டித்தனர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் பெரும் எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பிரித்தானியப் பிரதமர் இல்லம் வரை அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

இந்தப் பேரணியின் பின்னர் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை மீள பெற்றுக் கொள்வதற்கு உதவ வேண்டிய கடப்பாடு பிரிட்டனுக்கு உள்ளதை வலியுறுத்தி பிரிட்டிஷ் பிரதமருக்கும் மன்னர் சார்லஸ் மற்றும் உயரதிகாரிகளுக்கும் கடிதம் ஒன்றை ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்வில் உலகளாவிய புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

அண்மைய பதிவுகள்